இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தனைகள் 7

படம்
     ஒருவரிடம் பல மணி நேரம் பேசுவது நட்பல்ல...அவரைப் பற்றி மற்றவரிடம் தவறாகப் பேசாமல் இருப்பதே நட்பு.!      எந்த உறவும் தேவை இல்லை என்று விலகிப் போக காரணம் கோபமோ..! வெறுப்போ..! அல்ல.இன்னொரு முறை.. துரோகத்தையும் அவமானத்தையும் பார்த்து தன் தன்மானத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக.!!    பிரிவுக்கு மிகமுக்கியமாக அமைவது எதுவென்று யோசித்தால்...ஆரம்பத்தில் ஆர்வமிகுதியில் உளறிய சில உண்மைகளால் தான் இருக்கும்.!!!

சிந்தனைகள் 6

படம்
https://www.facebook.com/share/p/1XGDsGJZ9c/

சிந்தனைகள் 5

படம்
https://www.facebook.com/share/p/18Mr7UYma2/      நட்பாயினும் உறவாயினும் நாலடி தள்ளியே நில்லுங்கள் இடைவெளி உள்ள உறவே இடையில் விலகாது தொடரும்.!      எவ்வளவு நாள் பழகி இருந்தாலும் அந்தந்த நேரத்தில் அவரவர் புத்தியை காண்பித்துவிடுவர் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.!!     எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலுமே...உங்களுடைய உணர்வுகளை மதிக்கவில்லை எனும் பொழுது...சற்று விலகியே இருங்கள்.!!!

சிந்தனைகள் 4

படம்
https://www.facebook.com/share/p/1CABb2eRMG/

சிந்தனைகள் 3

படம்

சிந்தனைகள் 2

படம்
https://www.facebook.com/share/p/1A6M5NTpN4/

சிந்தனைகள் 1

படம்
https://www.facebook.com/share/p/1EXpkQ6YPg/

நல்ல சிந்தனை 16

படம்

நல்ல சிந்தனை 15

படம்

நல்ல சிந்தனை 14

படம்
          பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்களையும். கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும்.. துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தினவர்களையும்... நமக்கு உடல்நிலை சரியில்லாத போது நம்மை விசாரித்தவர்களையும்.. ஒருநாளும் மறவாதிருங்கள்... அவர்கள் தான் நம் உண்மையான சொந்தங்கள்,நண்பர்கள்.!      எல்லோருடைய வலியையும் புரிந்து கொள்ள தேவையில்லை... எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும்... யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எப்போதும் தோன்றாது.!!    ஊசி தங்கத்தில் செய்தது என்று எடுத்து கண்ணில் குத்துவீர்களா அதுபோலத்தான் எவ்வளவு நெருக்கமான உறவானாலும் நம் உணர்வுகளை மதிக்க தெரியாதவராயின்  அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள்.!!!

நல்ல சிந்தனை 13

படம்

நல்ல சிந்தனை 12

படம்
          ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக் கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல. அன்பு, அமைதி, நிம்மதி இவைகளை பெற்ற மனிதனிடம் உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.!     வீடு அழகாக இருக்க வீட்டை தினமும் சுத்தம் செய்கிறோம். வாழ்க்கை சிறப்பாக இருக்க உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.!!    மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பல ஏமாற்றங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.!!!

சுமதி ஆசிரியர் | Sumathy Teacher | பாகம் 1

படம்
     இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற அழகிய கிராமத்தில் வீரன்குடிகாடு என்னும் சிற்றூரில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி பக்கிரிசாமி, நாகம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.      இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உடன் பிறந்தவர்கள் ஆவார்கள். இரண்டு சகோதரர்களும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்கள். மூத்த பெண்ணாக குடும்பத்தில் செல்லமாக வளர்ந்து வந்தார்.        இந்த நிலையில் தந்தை மலேசியா சென்றவர் திரும்ப வரவில்லை. பாதுகாப்புக்காக தாயார் குழந்தைகளோடு தாத்தா வீட்டுக்கு சென்று அந்த குடும்பத்தில் ஐக்கியமாகினர். தாயார் தான் மூத்த பெண். சிறுவயதிலேயே திருமணம் ஆனதால் மாமன்கள் சித்திகள் சிறு வயதுகாரர்களாக இருந்தனர். ஆதலால் மாமன்கள் அண்ணன்கள் ஆகினர் சித்திகள் சகோதரிகளாகினர். நாளடைவில் அதுவே உறவாக நிலைத்தது. தாத்தா காயாரோகணம் ஊரில் செல்வந்தராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார். பரவை சந்தைக்கு காய்கறிகளை உற்பத்தி செய்...

நல்ல சிந்தனை 11

படம்
           புரிய வைக்கவும் முடியவில்லை.புரிந்து கொள்ளவும் முடியவில்லை. என்ற அளவில் தான் இன்றைய உறவுகள் உள்ளன.!       நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று ஒரு போதும் சண்டை போடமாட்டார்கள்... ஆனால் சத்தமில்லாமல் உங்களிடமிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள்.!!       உங்கள் மீது அன்பு காட்டிய ஒருவரை... எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும்... பிறர் முன்பு விட்டுக்கொடுத்து அவமானப்படுத்தி விடாதீர்கள்... பின் எவ்வளவுதான் நீங்கள் சமாதானம் செய்தாலும்... அந்த வலி சாகும் வரை அவர்கள்  மனதை விட்டுப் போகாது.!!!

நல்ல சிந்தனை 10

படம்
      அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றைக் கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.!        புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.!!        வாய் தவறி விழும் பேச்சுக்கள்... கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது... யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.!!!

நல்ல சிந்தனை 9

      தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரி என்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள் அவர்களுக்கு புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.சிந்தித்து செயல்படுங்கள் இதுவும் கடந்து போகும்.!        விட்டுக் கொடுப்பதற்கும் விட்டுச் செல்வதற்கும் ஒரே வித்தியாசம் தான்...உறவுகளை இழந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள்...உறவுகளே தேவையில்லை என்று நினைப்பவர்கள் விட்டுச் செல்கிறார்கள்.!!        அதிகமான அன்பை விட சரியான புரிதல் தான் எந்த உறவையும் நீண்டகாலம் வாழ வைக்கும்.!!!

நல்ல சிந்தனை 8

       அவமானமும்,அனுபவமும் தான் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆசான்... அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலையுயர்ந்த புத்தகமும் கற்றுக் கொடுக்காது.!        ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால் நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்.!!        பணத்தை வைத்து எந்தவொரு உறவையும்,மனிதரையும் தாழ்வாக கருதாதீர்கள்..!ஏனெனில் வாழ்க்கை  நிரந்தரம் இல்லாததுநொடியில் அனைத்தும் மாறிவிடும்.!!!

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

        ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன... பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி , தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்; கிருஷ்ணனுக்கு – ரோகிணி; முருகனுக்கு – விசாகம். இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள். ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ? பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.         சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்...

சிந்தனை 7

       அடியே படாமல் வலிக்க செய்வதும் வார்த்தை தான்... மருந்தே இல்லாமல் காயத்தை குணப்படுத்துவதும் வார்த்தையே.!          ஒரு குடும்பத்தில் ஆண் சரியாக இருந்தால்.. அந்தப்பெண் யாரிடமும் அசிங்கப்பட தேவையில்லை.!!          பழகியதற்கான பலனை அடைந்த பின்பு தான்... சிலர் விலகுவதற்காக காரணங்களை தேடுவார்கள்.!!!

நல்ல சிந்தனை 6

         உங்களுடைய தவறுகளை உங்களிடமே சொல்பவர்களை இழந்து விடாதீர்கள்...ஏனெனில் அவர்கள் நீங்கள் மற்றவர்களிடம் தலை குனியக் கூடாது என்று எண்ணுபவர்கள்.!       தேவைகள் முடிந்தபின்பு தேரே என்றாலும் தெருவில் தான் நிக்கனும்... தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல சுயநலம்.!!       படிப்பு,பணம்,பதவி, புகழ்,அந்தஸ்து, அதிகாரம் என்று எத்தனையோ இருந்தாலும்...சக மனிதரை மதிக்கத் தெரியாதவர் மனிதரே அல்ல...மிருகத்துக்கும் கீழானவர்.!!!

நண்பர்கள்

*பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..*   *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..*   *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*   *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..*   நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர்.   *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..*   35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01.  *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என...

நல்ல சிந்தனை 5

       *எந்த சூழ்நிலையிலும் முடிவுகளைத் தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், நம் முன்னேற்றத்துகான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.*        *எப்படி என்றால் நம் முயற்சியால் எதுவும் முடியும். பயிற்சியால் எல்லாம் படியும்*.        *முடியாததை முயற்சி உடைக்கும். முடியாதது என்பதே இல்லை.*        *வெற்றியை உற்சாகம் படைக்கும்*. *அந்த உற்சாகம்* *சரித்திரம் படைக்கும்*.        *உன்னிடம் இருக்கும் சக்திக்கு உனக்கு போட்டி யாரும் கிடையாது. உனக்கு போட்டியாளன் நீயே தான்.*        *உழைப்பை நம்பி நடை போடு*  *உன்னை வெல்ல யாரும் முடியாது*        *வல்லமை என்பது உன்னிடமிருக்கிறது.அதை வழிப்படுத்தும் திறமையும் உன்னிடம் இருக்கிறது.*        *எல்லை என்பதே உனக்கில்லை. உனக்கான எல்லையை நீ வகுத்துக் கொண்டால்வெற்றி நிச்சயம்*.

நல்ல சிந்தனை 4

        செய்ததை சொல்லிக் காட்டுவது குற்றம் தான்...ஆனால், நன்றியில்லாமல் மறந்து போவது பெருங்குற்றம்.!      பிறர் கண்களுக்கு நாம் மெளனமாக இருப்பது மட்டும் தான் தெரியும்.ஆனால் அந்த மெளனத்தில் எத்தனை வலிகள் இருக்கும் என்பது நம் உள்ளத்திற்கு மட்டுமே தெரியும்.!!       ஒருவர் உங்களை குறை சொன்னால் கலங்காதீர்கள்,ஏனென்றால் நல்லவர்கள் யாரும்மற்றவர்களை குறை சொல்லமாட்டார்கள்,குறை சொல்பவர்கள் யாரும் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள்.!!!

பூனையும் நரியும்

ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தன. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அவர்களை பிடிக்காது”, என்று நரி சொல்லியது . “ஆமா ஆமா அவர்களை எனக்கும்   சுத்தமா பிடிக்காது” என்று பூனையும் சொன்னது. “ அவை ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அவர்களால் என்னை பிடிக்க முடியாது.ஏனென்றால் ,  அவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்”, என்று அந்தப் பூனை கேட்டது. அதற்கு நரிசொல்லியது ,  "என்னிடம் ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து விடுவேன்”. என்று எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி. “நிஜமாகவா”? என்று அந்தப் பூனை கேட்டது . அதற்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதில் ஒன்று கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏனென்றால் அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க செய்யக் கூடியது” என்று அந்த நரி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தது. அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமா...

நல்ல சிந்தனை 3

படம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சிறப்பு பெயர்கள்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சிறப்பு பெயர்கள்   1)   அரியலூர்  /   சிமெண்ட் சிகரம்   2)   இராமநாதபுரம்    /   புனித பூமி  3)   ஈரோடு   /   மஞ்சள் நகரம்  4)   கடலூர்   /   புயல் பூமி 5)   கள்ளக்குறிச்சி    /   தமிழக அரிசி கிண்ணம்  6)   கரூர்   /   நெசவாளர்களின் வீடு 7)   கன்னியாகுமாரி   /    இந்திய தென்நிலை எல்லை   8)   காஞ்சிபுரம்  /   ஏரி மாவட்டம்   9)   கிருஷ்ணகிரி   /    நவ கண்டம்  10)   கோயம்பத்தூர்   /   தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்   11)   சிவகங்கை    /   சரித்திரம் உறையும் பூமி  12)   சென்னை    /   தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில் 13)   செங்கல்பட்டு    /...

நல்ல சிந்தனை 2

படம்

நல்ல சிந்தனை 1

படம்
 

sumathyteacher.blogspot.com | சுமதி டீச்சர்

   sumathy சுமதி சுமதி ஆசிரியர்  சுமதி டீச்சர் sumathyteacher.blogspot.com  

Sumathy | Sumathi | சுமதி

படம்
 Sumathy, Sumathi, Sumathy Teacher, Sumathi Teacher Sumathy  sumathy சுமதி சுமதி ஆசிரியர்  சுமதி டீச்சர் sumathyteacher.blogspot.com